இன்றைய இளம் நடிகைகள், கதாபாத்திரம் வலுவாக இருந்தால் எந்த வேடத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். இது திரைத்துறையின் ஆரோக்கியமான அம்சம். காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக சேரியில் வாழும் பெண்ணாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேபோலொரு வேடத்தை செய்திருக்கிறார் மனிஷா யாதவ்.
இந்தப் படத்துக்காக சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய சேரியில் 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த காலத்தில் அங்குள்ள சிலரை தோழியாக்கிக் கொண்டதாகவும், அவர்களின் வரவேற்பும், அன்பும் மனம் நெகிழச் செய்ததாகவும் மனிஷா கூறினார்.