நானும், மணிரத்னமும் ஒரு படம் குறித்து பேசினோம். தற்போது அந்தப் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். அப்படம் வெளிவந்தால் நான் ஏன் நடிக்க மறுத்தேன் என்பதற்கான காரணம் தெரியவரும். நான் நடிக்கும் படம் அனைத்துத் தரப்பினரையும் கவர வேண்டும் என்று நினைக்கிறேன். தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையும், எனக்கு விருதும் கிடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறினார்.