ஓ காதல் கண்மணி மும்பையில் நடக்கும் கதை

திங்கள், 13 ஏப்ரல் 2015 (14:55 IST)
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிதான் இப்போது டாக் ஆஃப் தி டவுன். துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. மியூஸிகல் லவ் ஸ்டோரி என்பது போல் அத்தனை பாடல்கள்.
 

 
ஆனால், நாயகனும் நாயகியும் உதட்டசைத்துப் பாடும் பாடல்கள் மொத்தம் இரண்டே இரண்டுதான். மற்றவை கதையோட்டத்தில் பின்னணியில் வருபவை. மென்டல் என்ற பாடலை மணிரத்னமும், ரஹ்மானும் இணைந்து எழுதியுள்ளனர். 
 
இந்தக் கதை முழுக்க மும்பையில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி எடுத்ததாக மணிரத்னம் கூறியுள்ளார். வரும் 17 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்