மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, நானி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
மணிரத்னம் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் எடுக்க விரும்பியதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அப்போதே துல்கர் சல்மானும், கீர்த்தி சுரேஷும் படத்திலிருந்து விலகினர். பிறகு நானி உள்ளே வந்தார். இருந்தும் படம் கைவிடப்பட்டது.