மலையாள நடிகர்களில் மம்முட்டியும், ஜெயராமும்தான் அடிக்கடி தமிழ்ப் படங்களில் நடித்து வந்தனர். மம்முட்டியின் தமிழ்ப் படங்களில் தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் தவிர்த்து வேறு படங்கள் சரியாகப் போவதில்லை. கடைசியாக அவர் தமிழில் நடித்தப் படங்கள் குறைந்தபட்ச கவனத்தைகூட பெறவில்லை. அதனால் தமிழில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராம் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ராமின் தங்கமீன்களில் நடித்த சாதனா முக்கிய வேடத்தில் இதில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், அக்டோபர் மாதம் தொடங்குகிறது.