காமெடி, சென்டிமெண்ட், வில்லன் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதாகவே மாறி ரசிகர்களை நொடிக்குநொடி பரவசப்படுத்துகிற கலைஞன், ஜெகதி ஸ்ரீகுமார். சில வருடங்களுக்கு முன் நடந்த கார் விபத்து ஜெகதியை ஒரேயடியாக முடக்கிப் போட்டது. கோமா நிலைக்கு தள்ளப்பட்டவர் பிழைப்பாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. பலவருட தொடர் சிகிச்சைக்குப் பிறகு இப்போது சக்கர நாற்காலிக்கு மாறியிருக்கிறார்.
சில தினங்கள் முன்பு அவரை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் நடிகர் மம்முட்டி. அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு தனது ஆத்மார்த்த நண்பருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பிறகே, அவர் ஜெகதியை சந்தித்தது தெரிய வந்தது.