சினிமா காமெடிப் போலீஸான கேரளா போலீஸார்

திங்கள், 2 மார்ச் 2015 (15:28 IST)
அன்னாயும் ரசூலும், இதிகாசா போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர், டாம் சாக்கோ. இவர் ஒரு மாதத்துக்கு முன் கொகெய்ன் போதை மருந்து பயன்படுத்தியதாக ஒரு அபார்ட்மெண்டிலிருந்து கைது செய்யப்பட்டார். அவருடன் ஒரு உதவி இயக்குனர் மற்றும் மூன்று மாடல் அழகிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
மலையாள திரையுலகில் பரவிவரும் போதை கலாச்சாரம் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் டாம் சாக்கோவை கைது செய்த போலீஸாரை காமெடியர்களாக்கும் திடீர் திருப்பம் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ளது.
 
டாம் சாக்கோ உள்பட ஐந்து பேரையும் கைது செய்ததும் ஐவரின் ரத்தமும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. பரிசோதனையின் ரிசல்ட் தற்போது வந்துள்ளது. டாம் சாக்கோ உள்பட ஐவரும் போதை பொருள் உட்கொள்ளவில்லை என்று ரிசல்ட் வந்திருப்பதால் அவர்களை கைது செய்த போலீஸார் அதிர்ந்து போயுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்