வர்மாவுக்கு தெலுங்கில் பவன் கல்யாண்தான் இஷ்ட தெய்வம். பவன் உடனே கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகணும் என்று பணம் தராத பிஆர்ஓவாக சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதேநேரம் மகேஷ்பாபு என்றால் மனசு மக்கர் செய்யும். ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கும் ஒரு தகவல் மகேஷ்பாபு ரசிகர்களை வெறி பிடிக்க வைத்துள்ளது.
போக்கிரி ரிட்டர்ன்ஸில் மகேஷ்பாபுவை வர்மா கலாய்க்கப் போவதாக கேள்வி. தெலுங்குப் படங்களையும், நடிகர்களையும் கலாய்க்கும் சம்பூர்ணேஷ் பாபு என்ற நடிகரைத்தான் இதில் நடிக்க வைக்கப் போகிறாராம். அதனால்தான் மகேஷ்பாபுவின் ரசிகர்களிடமிருந்து கொடுரமான பற்கடிப்பு சத்தம் வருகிறது.