நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனால் அவரை தேடி நல்ல கதையம்சம் உள்ள கதைகள் வர ஆரம்பித்தன. பெண்குயின், அண்னாத்த என வரிசையாக படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் ஓடிடியில் ரிலிஸான பெண்குயின் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
ஆனாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கென ஒரு மார்க்கெட் உள்ளது. தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த, மணிரத்னம்மின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது போல தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் புதுப்படத்திலும் அவர் நடிப்பதாக இருந்தார். ஆனால் இப்போது சில காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.