மூன்று முன்னணி நாயகிகளுடன் தமிழில் அறிமுகமாகும் ஆந்திராவின் பிரின்ஸ் மகேஷ்பாபு

திங்கள், 29 ஜூன் 2015 (15:29 IST)
ஆந்திரா ரசிகர்கள் மகேஷ்பாபுவை செல்லமாக பிரின்ஸ் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். எல்லாவகையிலும் அப்படி அழைப்பதற்கு தகுதியான சார்மிங் லுக் மகேஷ்பாபுக்கு.
 
இளம் தெலுங்கு நடிகர்களில் இவரது படங்கள்தான் தமிழில் டப் செய்யப்பட்டு ஓரளவு ஓடுகின்றன. இவரது குமரன், நந்து படங்களுக்கு தமிழகத்தில் நிறைய ரசிகர்கள்.
தமிழில் மகேஷ்பாபு அறிமுகமாகும் படம் ஜுலை 13 தொடங்குகிறது. படத்துக்கு பிரமோற்சவம் என்று பெயர் வைத்துள்ளனர். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்குகிறார்.
 
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது. காஜல் அகர்வால், ப்ரணித்தா, சமந்தா என படத்தில் மூன்று நாயகிகள். மகேஷ்பாபுவின் படப்போஸ்டரை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய சமந்தாவை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று மகேஷ்பாபுவின் ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். பொதுவாக ரசிகர்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பவரல்ல மகேஷ்பாபு.
 
இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்