இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் - உறுதி செய்தது லைக்கா

செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (14:25 IST)
ஷங்கரின் உதவி இயக்குனர் சிம்புதேவன் இயக்க, ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்த படம், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. வடிவேலு இரு வேடங்களில் நாயகனாக நடித்த இந்தப் படம் மெகா ஹிட்டாக அமைந்தது.


 
 
இம்சை அரசனுக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கிய எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. போலவே, வடிவேலு நாயகனாக நடித்தப் படங்களும் தோல்வியே கண்டன. இந்நிலையில், ஷங்கரின் எஸ் பிக்சர்ஸுடன் இணைந்து இம்சை அரசனின் 2 -ஆம் பாகத்தை எடுக்க லைக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. ஷங்கர் ரஜினியை வைத்து இயக்கிவரும் 2.0 படத்தை லைக்கா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், "வெள்ளைக் கொடிக்கு மீண்டும் வேலை வந்துவிட்டதா? எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா இரண்டாம் பாகத்துக்கு இணைந்துள்ளது. பொழுதுபோக்கு உத்திரவாதம்" என லைக்கா சார்பில் ட்விட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
ஏறக்குறைய லைக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே இது வெளியிடப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்