லிங்கா திரையிட தாமதம் - தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

சனி, 13 டிசம்பர் 2014 (13:03 IST)
லிங்கா படத்தை பெரும்பாலான திரையரங்குகள் 11 -ஆம் தேதி நள்ளிரவே திரையிட்டன. நள்ளிரவு காட்சிக்கான டிக்கெட்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் பெரும் தொகைக்கு விற்கப்பட்டன.
சென்னை காசி திரையரங்கிலும் நள்ளிரவு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் போடுவதில் தாமதம் ஏற்படவே கோபமான ரசிகர்கள் திரையரங்கின் அலங்கார கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். 
 
போலீஸார் விரைந்து வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தினர். போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அரைமணி நேர தாமதத்துக்கே அடிதடியில் இறங்கிய ரசிகர்கள், பதினைந்து வருடங்களாக அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என்று ரஜினி போக்குக் காட்டுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்