லிங்கா பட விவகாரம் இப்போதைக்கு ஓயும்போல் தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், விநியோகஸ்தர்களே படத்துக்கு எதிராக பேசி படத்தை கொன்றுவிட்டனர் என்று பேசியது எதிர்முகாமை கொஞ்சம் ஷேக் செய்துள்ளது.
இந்நிலையில் வேந்தர் மூவிஸ் சிவா, விநியோகஸ்தர்களுக்கு உரிய நஷ்டஈடு பெற்றுத் தருவேன் என்று உறுதி அளித்தார். அத்துடன், இந்தப் பிரச்சனைக்கு மூலகாரணமாக இருந்த சிங்காரவேலன் தவிர்த்து பிற விநியோகஸ்தர்களை அழைத்தவர், லிங்கா பிரச்சனையில் தயாரிப்பாளரையும், ரஜினியையும் காயப்படுத்திவிட்டீர்கள். அதனால் மன்னிப்பு கடிதம் எழுதித் தாருங்கள் என்று கேட்டார். ஆனால், அப்படி மன்னிப்பு கடிதம் எழுதித்தர விநியோகஸ்தர்கள் மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி - தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன், செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உள்பட சிலர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள்,
படம் வெளியான சில நாள்களிலேயே படத்தின் வசூல் குறித்து சொன்னது, நஷ்டம் ஏற்படுமோ என்ற பதற்றத்தில் நாங்கள் சொன்னது. ரஜினியின் பிறந்தநாளில் ஏன் படத்தை வெளியிட வேண்டும். அதுஎன்ன தேசிய விடுமுறையா என்று பேசியதற்கு ரஜினியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேnம்.