காஞ்சனா 2 படம் வெளிவரும் முன்பே, அடுத்து, ஒரு டிக்கெட்ல ரெண்டு படம் என்ற படத்தை இயக்கி நடிப்பதாக லாரன்ஸ் அறிவித்திருந்தார். இந்தப் படத்தில் இடைவேளைக்குமுன் ஒரு கதையும், இடைவேளைக்குப் பிறகு ஒரு கதையும் இடம்பெறும். ஒரு கதைக்கு கிழவன் என்றும், இன்னொரு கதைக்கு கருப்புதுரை என்றும் பெயர் வைத்திருந்தார்.
வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் இரு படங்களை இயக்கி நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு, ஒரு டிக்கெட்ல ரெண்டு படம் குறித்து லாரன்ஸ் எதுவும் கூறவில்லை. அவர் இயக்குவதாக இருந்த இந்தப் படத்தின் இரு கதைகளையும் இணைத்துதான் மொட்ட சிவா கெட்ட சிவா கதையை உருவாக்கியிருக்கிறார் என்றும், இல்லை கருப்புகுதிரை கதையை கொஞ்சம் விரிவுப்படுத்தி மொட்ட சிவா கெட்ட சிவா கதையை எழுதியிருக்கிறார் எனவும் இருவேறு தகவல்கள் உலவுகின்றன.