ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

சனி, 28 மார்ச் 2015 (11:00 IST)
ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் தயாரிப்பில் டிகே இயக்கிய யாமிருக்க பயமே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதே நிறுவத்துக்கு அடுத்தப் படத்தை டிகே இயக்குகிறார். ஜீவா நாயகனாக நடிக்கும் இந்த காதல் காமெடிப் படத்துக்கு, கவலை வேண்டாம் என பெயர் வைத்துள்ளனர். 
 

 

பாபி சிம்ஹா கவலை வேண்டாம் படத்தில் முக்கியமான வேடம் செய்கிறார். படத்தில் இரு நாயகிகள். அதில் ஒருவராக கீர்த்தி சுரேஷை தேர்வு செய்துள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் இது என்ன மாயம் படத்தில் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அப்படம் வெளியாகும் முன்பு, சிவ கார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அத்துடன் மனோபாலா தயாரிக்கும் பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹாவுடனும் நடித்து வருகிறார். 
 
முதல் படம் வெளியாகும் முன்பே 4 -வது பட வாய்ப்பாக கவலை வேண்டாம் கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்