கீர்த்தியை டிகே இயக்கும், கவலை வேண்டாம் படத்தில் ஒப்பந்தம் செய்தனர். சம்பளம் எல்லாம் பேசித்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜீவா படத்தின் நாயகன். அவர் திருநாள் படத்தில் பிஸியாக இருந்ததால் கவலை வேண்டாம் தொடங்க சிறிது தாமதமானது.
இந்த இடைவெளியில் தனுஷுடன் ஒரு படம், மணிரத்னம் படம் என இரு படங்களில் கமிட்டானார் கீர்த்தி. இந்தப் படங்களால் என்னுடைய கீர்த்தி அதிகமாயிற்று என்று, கவலை வேண்டாம் தயாரிப்பாளரிடம் பேசியதைவிட அதிக சம்பளம் கேட்டிருக்கிறார். அத்துடன் ஒரேயடியாக கால்ஷீட் தரமுடியாது, அவ்வப்போது வந்து நடிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.