கீர்த்தி சுரேஷ் தந்த அல்வா

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (14:45 IST)
பத்து வயசு பிள்ளை தலையில் பாறாங்கல்லை வைத்தால் இப்படித்தான் தப்பு தப்பாக நடக்கும்.

கீர்த்தி சுரேஷ் நடித்து ஒரு படம்தான் வெளிவந்திருக்கிறது. அதற்குள் அரை டஜன் படங்கள் வரிசைக்கட்டினால் கால்ஷீட்டுக்கு பதில் இருட்டுகடை அல்வாதான் பரிசாக கிடைக்கும்.
 
கீர்த்தியை டிகே இயக்கும், கவலை வேண்டாம் படத்தில் ஒப்பந்தம் செய்தனர். சம்பளம் எல்லாம் பேசித்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜீவா படத்தின் நாயகன். அவர் திருநாள் படத்தில் பிஸியாக இருந்ததால் கவலை வேண்டாம் தொடங்க சிறிது தாமதமானது.
 
இந்த இடைவெளியில் தனுஷுடன் ஒரு படம், மணிரத்னம் படம் என இரு படங்களில் கமிட்டானார் கீர்த்தி. இந்தப் படங்களால் என்னுடைய கீர்த்தி அதிகமாயிற்று என்று, கவலை வேண்டாம் தயாரிப்பாளரிடம் பேசியதைவிட அதிக சம்பளம் கேட்டிருக்கிறார். அத்துடன் ஒரேயடியாக கால்ஷீட் தரமுடியாது, அவ்வப்போது வந்து நடிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
 
இந்த இரண்டுமே தயாரிப்பாளருக்கு கசப்பு மருந்துதான். இந்த கஷாயத்துக்கு காஜல் அகர்வால் பெட்டர் என்று கீர்த்தியை மாற்றிவிட்டு காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
கீர்த்திக்கும் சந்தோஷம், தயாரிப்பாளருக்கும் தலைவலி இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்