கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (15:02 IST)
கண்ணன் இயக்கிய ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் தோல்வி. அதுபோல் கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படமும் தோல்வி. இந்த இரண்டு ராசாக்களும் தற்போது ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

 
 
இவர்கள் இணையும் படம் செப்டம்பர் மாதம் 12 -ஆம் தேதி தொடங்குகிறது. 
 
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார் கண்ணன். ஊட்டி சென்று கதைவிவாதம் எல்லாம் நடத்தினர். கடைசியில் அப்படம் கைவிடப்பட்டது. 
 
கண்ணன், கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தை ஆஷாஸ்ரீ தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்