'அவம்' படத்துக்காக, உணர்ச்சிப்பூர்வமாகப் பாடிய கமல்ஹாசன்
சனி, 4 அக்டோபர் 2014 (15:51 IST)
பல்கலை வித்தகரான கமல்ஹாசன், நடிப்பு, நடனம், இசை, இயக்கம், வசனம், பாடல் எழுதுதல்... எனப் பற்பல துறைகளிலும் திறமையும் அனுபவமும் பெற்றவர். பற்பல பாடல்களைப் பாடி, ஒரு பாடகராகவும் வெற்றி பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக, இப்போது அவம் படத்துக்காக உணர்ச்சிப்பூர்வமாக ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
மேலும்
விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில், சுந்தரமூர்த்தி இசையில் உருவாகி வரும் படம் “அவம்”. இப்படத்தில்தான் கமலின் குரலில் பதிவான பாடல் ஒலிக்க உள்ளது.
மேலும்
மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடல், ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிப்படுத்தும் வகையில் பாட வேண்டியிருந்தது. கமல், வரிகளின் தன்மையை உணர்ந்து தன் குரலின் வாயிலாக பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் எனப் படக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.
மேலும்
படத்தின் கதைக் கரு:
சாதாரண வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் கார்த்திக், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணைச் சந்தித்ததும், அந்த பெண்ணால் அவன் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பங்கள், அந்தச் சம்பவத்தால் நிகழும் நிகழ்வுகளே படத்தின் கதைக் கரு. பல புதுமுகங்களுடன் அனுபவமான நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில், கௌரவ் நாயகனாக நடிக்க, கன்னட நாட்டை சேர்ந்த காவ்யா ஷேட்டி நாயகியாக நடிக்கிறார்.
மேலும்
அவம் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் பின்வருமாறு: