தொடர்ந்து அவ்வபோது மருதநாயகம் படம் மீண்டும் துவக்கப்படுவதைப் பற்றி கமல்ஹாசன் பேசி வருகிறார். சமிபத்தில், "லண்டனில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஒரு திரைப்பட தயாரிப்பாளர். அவர் மருதநாயகத்தை தயாரிக்க தயாராக இருக்கிறார். படத்தை எப்போது துவங்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போது என்னை அழையுங்கள்" என்று கூறியதாக கமல் தெரிவித்தார்.
இந்நிலையில், கமல் மற்றும் லைக்கா அதிபர் சுபாஷ் கரண் இருவரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இச்சந்திப்பில் 'மருதநாயகம்' படத்தின் பொருட்செலவு மற்றும் படப்பிடிப்பு நாட்கள் ஆகியவரை குறித்துப் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.