தூங்கா வனம் ஓர் இரவில் நடக்கும் கதை. அதுவும் ஒரு நைட் கிளப்பில் நடக்கும் கதை. படத்தின் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் மட்டும் பகலில் வெளியிடத்தில் நடக்கும். முழுக்க த்ரில், ஆக்ஷனால் பொதியப்பட்ட, காதலுக்கும், காமெடிக்கும் இடமில்லாத படம். சின்னதாக அப்பா - மகன் சென்டிமெண்ட் மட்டும் உண்டு.
வேதாளம் தூங்கா வனத்தைப் போலன்றி காதல், மோதல், சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்துகட்டிய கதம்ப மாலை. குடும்பப் பார்வையாளர்களுக்கான காதாம் அல்வா.