கேரளாவில் வளரும் கள்ளன்

வியாழன், 26 நவம்பர் 2015 (15:34 IST)
கரு.பழனியப்பன் பல படங்களை இயக்கினார். பிறகு ஒரு படத்தை இயக்கி நடித்தார். முதல் படம் பார்த்திபன் கனவு தவிர்த்து மற்ற எல்லா படங்களும் தோல்வி. இந்நிலையில் சந்திரா இயக்கும் படத்தில் நாயகனாகியுள்ளார்.


 
 
சிறுகதை எழுத்தாளரான சந்திரா இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவரது முதல் படம் கள்ளன். இதன் படப்பிடிப்பு கேரளாவிலுள்ள கொச்சியில் தொடங்கியது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கிறது. இந்தப் படத்துக்காக அடர்ந்த தாடி வளர்த்துள்ளார் கரு.பழனிய்பன்.
 
நிகிதா என்ற டெல்லியை சேர்ந்த மாடல் நாயகி. படத்தை ஒரே கட்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்