கலாபவன் மணியின் திடீர் மரணம் கேரளா திரைக்கலைஞர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்நிலையில், கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் மரணம் சம்பவித்ததாக அம்ரிதா மருத்துவமனை கூறியுள்ளது. அதேநேரம், ரத்தம் வாந்தியெடுத்த நிலையில் மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் படிந்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.