இந்தப் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கும்போது, நேரில் பார்த்த கபிலன் வைரமுத்து, அஜித்தைப் பார்த்து வியந்து போனாராம். “சண்டைக் காட்சியில் ஒவ்வொரு டேக் முடியும்போதும் அஜித் சாரிடம் ஓடிப்போய், ‘சூப்பராக செய்தீர்கள்’ என்று சொல்வேன். அவர் நம்பாமல், ‘உண்மையாகவா?’ என்று கேட்பார். அந்த தருணங்கள் எல்லாம் எப்போதுமே மறக்க முடியாத நினைவுகள். சண்டைக் காட்சிகளின்போது பயம் தரக்கூடிய ஹைஜம்ப்லாம் செய்தார் அஜித். அதற்கு நானே சாட்சி” என்கிறார் கபிலன் வைரமுத்து.