பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தவர் இயக்குனர் பி.வாசு. இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.மூர்த்தி கண்ணன் திரைக்கதை எழுதி இயக்கி வரும் படம் ‘சாலையோரம்’. இதில் ராஜ் கதாநாயகனாகவும், செரீனா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். பாண்டியராஜன், சிங்கம் புலிஇ முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசையமைப்பாளராக சிங்கப்பூரை சேர்ந்த சேது ராம் அறிமுகமாக, பின்னணி இசைகோர்ப்பு பணிகளை மரியா மனோகர் செய்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத வேல்முருகன், பிரசன்னா, மஹதி, பெள்ளிராஜ், பத்மலதா ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படத்தை ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்பராயன் மற்றும் டாக்டர். செல்வ.தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாகை, காரைக்கால், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் முடிந்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.