’தமிழ்க் குரலாய் எழுந்தவர் கே.பாலசந்தர்’’ - கமல்ஹாசன் புகழாரம்

வியாழன், 23 டிசம்பர் 2021 (15:04 IST)
இன்று  இயக்குநர்  கே. பாலசந்தரின்   நினைவு தினம். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ‘’தமிழ்க் குரலாய் எழுந்தவர் கே.பாலசந்தர்’’ என புகழாரம் சூட்டியுள்ளார்.

நீர்க்குமிழி என்ற படத்தில் இயக்குநரான அறிமுகமான  இயக்குநர் கே.பாலச்சந்தர் அடுத்ததுத்து தான் இயக்கிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அதனால் இயக்குநர் சிகரம் என அழைக்கப்படுகிறார். இவரது 90 ஆவது பிறந்த தினம் இன்று.இவர், தேசிய விருதுகளையும், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் வென்றவர்.

இந்நிலையில், இன்று பாலச்சந்தரின்  நினைவு தினத்தை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் நட்சத்திரங்களும் அவருக்கு மரியாதை செலுத்தி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது குரு இயக்குனர்.கே.பாலச்சவ்தர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்’’, வங்காளமும் மலையாளமும் திரையுலகில் அறிவால் ஜீவித்துக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்க் குரலாய் எழுந்தவர் கே.பாலசந்தர். ஏழாண்டுகளாக அவர் என் நினைவிலும் பேச்சிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்