ஜோதிகா நடிக்க வந்து பல வருடங்களாகி இங்கேயே திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அவரது மாமனார் தமிழகம் அறிந்த தமிழார்வலரில் ஒருவர், சிறந்த மேடைப் பேச்சாளர். ஆனால், மருமகளுக்கு இன்னும் தமிழ் தகராறுதான்.
36 வயதினிலே படத்திலும் ஜோதிகாவுக்கு டப்பிங் வேறொருவர்தான் பேசியிருக்கிறார். தமிழ்தான் தெரியுமே பேசிப் பார்ப்போம் என்று முயன்றபோது, உச்சரிப்பில் அந்நியத்தன்மை இருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டதாக ஜோதிகா கூறினார்.