அடர்ந்த மீசையுடன் அடாவடிக்கு தயாராகும் ஜீவா

வியாழன், 21 மே 2015 (16:26 IST)
ராம்நாத் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் திருநாள் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடக்கிறது. இந்தப் படத்தில் ஜீவா ரவுடியாக வருகிறார்.
 
இந்த கதாபாத்திரத்துக்காக அடர்ந்த மீசை வைத்திருப்பவர், டல் மேக்கப்பில் தோன்றுகிறார். அதிக நேரம் அவர் சூரியனுக்குகீழ் செலவிடுவதாகவும் தகவல். தோலை கறுக்கச் செய்யவே இந்த வெட்டவெளி சன்பாத்.
 
நயன்தாரா திருநாளில் டீச்சராக வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்த மாதம் முதல் தேதிமுதல் படமாக்கப்பட உள்ளது. தற்போது ஜீவா மற்றும் மீனாட்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மீனாட்சி இதில் வில்லனின் மனைவியாக வருவதாக கேள்வி. 
 
என்றென்றும் புன்னகை தவிர்த்து ஜீவா நடித்த சமீபத்திய படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதனால் திருநாளின் வெற்றியை ஜீவா ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்