இந்தியில் திருஷ்யம் 2 படத்தை இயக்கப்போவது யார்? ஜீத்து ஜோசப் விளக்கம்!

திங்கள், 21 ஜூன் 2021 (08:13 IST)
இயக்குனர் ஜீத்து ஜோசப் திருஷ்யம் 2 படத்தை இந்தியில் தான் இயக்கவில்லை என அறிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கிலும் அந்த படத்தின் ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார் ஜீத்து. அதையடுத்து இந்தியிலும் அவரே இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை மறுத்துள்ளார் ஜீத்து ஜோசப். மேலும் இந்தியில் யார் இயக்கினால் சரியாக இருக்கும் என்ற கேள்விக்கு ‘அதை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்