மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவை போற்றும் வகையில், அவரது இயக்கத்தில் வெளியான, யாருக்காக அழுதான் திரைப்படத்தை சென்னையில் தமிழ்ஸ்டுடியோ திரையிடுகிறது.
ஜெயகாந்தன் இயக்கிய படங்களில் முக்கியமானது, யாருக்காக அழுதான். நாகேஷ் நடித்த இந்தத் திரைப்படத்தை சென்னை கன்னிமரா நூலகத்துக்கு எதிரேயுள்ள ஜீவனஜோதி அரங்கின் இக்சா மையத்தில் தமிழ்ஸ்டுடியோ திரையிடுகிறது. அனுமதி அனைவருக்கும் இலவசம். நாள் நாளை சனிக்கிழமை (18-04-15) மாலை ஆறு மணி.