நடிக்க வரும் அம்பிகாவின் மகன்கள்

செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (11:16 IST)
முன்னாள் நடிகை ராதா தனது மகள்கள் கார்த்திகா, துளசி இருவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இரண்டு பேரும் சோபிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.
 
நடிப்பு கைகொடுக்காது என்ற நிலையில் லண்டன் யூனிவர்சிட்டியில் படித்து பட்டம் வாங்கினார் கார்த்திகா. 
 
ராதாவின் சகோதரி அம்பிகாவின் வாரிசுகளும் விரைவில் நடிக்க வருகிறார்கள். அம்பிகாவுக்கு ராம்கேசவ், ரிஷிகேஷ் என இரு மகன்கள். இருவரும் யுஎஸ்ஸில் கல்லுnரி படிப்பை முடித்துள்ளனர். படிக்கும் போதே எதிர்கால சிந்தனையுடன் இசை, நடனம், சண்டை என சினிமா கலையிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 
இந்த வருட இறுதியில் இந்தியா திரும்பும் இவர்கள் முழுமூச்சாக சினிமாவில் நடிக்கப் போகிறார்களாம். இப்போதே மகன்களுக்கு களம் அமைக்கும்விதமாக வேலைகளை ஆரம்பித்துள்ளார் அம்பிகா.

வெப்துனியாவைப் படிக்கவும்