மறைமுகமாக போட்டி போடும் அனுஷ்கா, நயன்தாரா!!

திங்கள், 22 மே 2017 (17:31 IST)
தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ராமாயணம் காவியத்தை ரூ. 500 கோடியில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். 


 
 
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ராமர், சீதை கதாபாத்திரங்களுக்கு மிக முக்கிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால் நடிகர் நடிகைகள் இடையே போட்டி மறைமுகமாக நடக்கிறதாம்.
 
அந்த வகையில், சீதை கேரக்டருக்கு அனுஷ்கா, நயன்தாரா  பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. எனவே, இருவரும் மத்தில் மறைமுகமாக போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறதாம்.
 
படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்