ஒருவார இடைவெளியில் வெளியாகும் விஷாலின் இரு படங்கள்

சனி, 7 மே 2016 (14:45 IST)
ஒருவழியாக மத கஜ ராஜா வெளியாகிறது. தயாரிப்பாளரின் கடன்கள் காரணமாக பல ஆண்டுகள் பெட்டிக்குள் இருந்த படம், வருகிற 13-ஆம் தேதி கண்டிப்பாக திரைக்கு வந்துவிடும் என்று அறுதியிட்டு உரைத்திருக்கிறார்கள். 


 
 
அது உண்மையாகட்டும்.
 
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, சந்தானம் நடித்த இப்படம் வெளியாகாததால் சுந்தர் சி. விஷாலை வைத்து ஆம்பள என்ற படத்தை எடுத்தார். ஏன் இந்த கொலவெறி என்று கேட்கும்படி இருந்தது படத்தின் கதையும், திரைக்கதையும். மத கஜ ராஜா அப்படி இருக்காது என நம்புவோம்.
 
முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மருது படம் மே 20 வெளியாகிறது. மத கஜ ராஜா வருகிற வெள்ளிக்கழமை என்றால் மருது அதற்கடுத்த வெள்ளிக்கிழமை. 
 
இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் விஷால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறாரா இல்லை இரட்டை தலைவலியில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. படம் வெளியாவது சந்தோஷம் என்றால், இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இரண்டுமே கவனிக்கப்படாமல் போனால் அது கவலைக்குரிய விஷயம்தானே.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்