புதிய படம் ஒன்றில் கவனம் செலுத்தும் விக்ரம்

செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (12:47 IST)
இருமுகன் படத்தினை வழக்கத்துக்கு மாறாக வெள்ளிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமையில் வெளியிட்டனர்.

 
விக்ரம் நடிப்பு, ஆனந்த் ஷங்கர் இயக்கம் என்பதால் படத்துக்கு நல்ல கூட்டம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை. படம் முதல் நாளில் ஐந்து கோடிகளைத் தாண்டி வசூலித்தது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் எப்படியும் கூட்டம் இருக்கும். திங்கள்கிழமை ஒருநாள் மட்டுமே வேலைநாள். அடுத்த நாள் பக்ரீத் பண்டிகை... விடுமுறை.
 
இருமுகனுக்கு அடுத்து சாமி 2 என்று ஆடியோ லான்ஞ்சிலேயே அறிவித்து ஃபைனான்ஸ் பார்த்துவிட்டார் ஷிபு தமீம்ஸ். ஆனால் ஹரி இன்னும் எஸ்3 யை முடிக்கவில்லை. தீபாவளிக்குத்தான் எஸ்3 ரிலீஸ். அதன் பின்னர் ப்ரீ புரடக்‌ஷனுக்கு மூன்று மாதமாவது தேவைப்படும். எனவே அதற்குள் ஒரு படம் நடித்துவிடலாம் என திட்டமிடுகிறார் விக்ரம். அதன் இயக்குனர் சாக்ரடீஸ். விரைவில் விக்ரமை அடுத்த படத்திலும் எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்