அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன், சண்டக்கோழி 2 படத்தில் நடிப்பதாக ஒரு வதந்தி. மஞ்சிமா மோகனே, அது வதந்தி என்று உறுதி செய்துள்ளார்.
மஞ்சிமா மோகன் தற்போது விக்ரம் பிரபுடன் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் படத்திலும் கமிட் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.