ஏற்கனவே பவன் கல்யாண்-திரிவிக்ரம் கூட்டணியில், 'அத்தாரின்ட்டிகி தாரேதி', 'ஜால்சா' ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களாக அமைந்தன. எனவே மூன்றாவதாக இருவரும் இணையும் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார்.