சொந்தத் தயாரிப்பில் கலெக்டராகும் நயன்தாரா

புதன், 25 மே 2016 (11:12 IST)
நயன்தாரா நடிக்கிறார் என்றால் படம் தயாரிக்க பலபேர் இருக்கிறார்கள். அதையும் மீறி, கதை பிடித்ததால் தானே அக்கதையை படமாக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா.


 


படத்தயாரிப்பு சூதாட்டமாகிவிட்டது தெரிந்தும் நயன்தாரா எடுத்திருக்கும் துணிச்சல் முடிவுக்கு ஒரு சலாம். 
 
சமீபமாக நாயகி மையப் படங்களில் ஆர்வம் காட்டுகிறார் நயன்தாரா. ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர் ஜெகன் நயன்தாராவிடம் சொன்ன கதை துணிச்சல்மிக்க ஒரு பெண் கலெக்டரை பற்றியது. கதையை கேட்டவர் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதுடன், படத்தை தயாரிக்கவும் முன் வந்துள்ளார். நயன்தாரா பத்து வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் இருந்தாலும் நடிப்பைத்தாண்டி தயாரிப்பில் இறங்குவது இதுவே முதல்முறை.
 
நயன்தாரா தயாரிக்கிற அளவுக்கு அப்படியென்ன கதை என்று ஜெகனின் படத்துக்கு இப்போதே ஏக எதிர்பார்ப்பு. 
 
இதே சூட்டோடு படத்தை எடுத்து வெளியிடுங்கள். வெற்றி நிச்சயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்