சமீபமாக நாயகி மையப் படங்களில் ஆர்வம் காட்டுகிறார் நயன்தாரா. ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர் ஜெகன் நயன்தாராவிடம் சொன்ன கதை துணிச்சல்மிக்க ஒரு பெண் கலெக்டரை பற்றியது. கதையை கேட்டவர் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதுடன், படத்தை தயாரிக்கவும் முன் வந்துள்ளார். நயன்தாரா பத்து வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் இருந்தாலும் நடிப்பைத்தாண்டி தயாரிப்பில் இறங்குவது இதுவே முதல்முறை.