பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு நாட்களாக அழாத ஓவியாவை, இப்போது பலரும் அழ வைப்பது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆரவ், ஓவியா இடையே நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினையை பற்றி கூறுவதை விட, இருவரும் பேசி முடிவெடுப்பது நல்லது என அறிவுரை கூறினார். இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய புரொமோவில் ஓவியா, ஆரவிடம் பேச ஐந்து நிமிடம் கேட்கிறார், ஆனால் ஆரவ் அவரிடம் பேச மறுக்கிறார், அதோடு மோசமாகவும் திட்டுவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.