இந்நிலையில் மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரியானாவின் நவாப் வம்சத்தைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகான் பட்டோடியின் மனைவி நடிகை ஷர்மிளா தாகூரும், அவரது மகனும் இந்தியின் முன்னணி நடிகருமான சைஃப் அலிகானும் அரியானாவில் உள்ள தங்கள் அரண்மனையில் நேற்று முன்தினம் இரவு மது விருந்து அளித்தளர்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கையில் அதை மீறி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதற்கும், பொதுமக்களின் அமைதிக்கு பங்களம் விளைவித்ததற்கும், அனுமதி பெறாமல் மது விருந்து அளித்ததற்கும் தேர்தல் ஆணையம் ஷர்மிளா தாகூருக்கும், சைஃப் அலிகானுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.