தந்தைக்கு மணிமண்டபம் கட்டும் இளையராஜா

சனி, 28 பிப்ரவரி 2015 (14:56 IST)
இளையராஜாவின் அம்மா பக்தி உலகறிந்தது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கிய அம்மா அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தவர், அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று பாடிய நான், அம்மான்னா சும்மா இல்லடா என்றும் பாடியிருக்கிறேன் என்று பேசினார்.
 
தனது சொந்த ஊர் பண்ணைபுரத்தில் தனது தாய் தந்தைக்கு நினைவிடம் அமைத்துள்ளார் இளையராஜா. இப்போது தனது தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான வேலையில் இறங்கியுள்ளார். அதற்காக நிலம் பார்த்து, பூமி பூஜை போட்டு வேலையும் ஆரம்பித்துள்ளார்.
 
மிகப்பிரமாண்டமாக இந்த மணிமண்டப திறப்புவிழாவை அவர் நடித்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்