இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய யுவன் சங்கர் ராஜா, ‘’சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அதுபோன்ற நிலைமை இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.