கோடிகளே போனாலும் கேமரா முன்னால்தான்...

சனி, 25 ஜூன் 2016 (12:50 IST)
எஸ்.ஜே.சூர்யா பவன் கல்யாண் படத்தைத் துறந்து முழுநேர நடிகராவது என்று தீர்மானித்துள்ளார்.


 


பவன் கல்யாண் படத்துக்கான கம்போஸிங் தொடங்கி பரபரவென வேலைகள் வீறு கொண்ட போது இந்த திடீர் முடிவை எடுத்தார். அவருக்குள் இருக்கும் நடிகன் எடுத்த தீர்மானமான முடிவு இது.
 
இறைவி படத்தில் கிடைத்த பெயர், நடிகனாக வேண்டும் என்ற அவரது அந்நாள் கனவை விசிறிவிட்டது முதல்காரணம். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில், நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகிறது. வேறு சில படங்களிலும் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க அழைக்கிறார்கள்.
 
என்னுடைய படம் முடியும்வரை நடிப்பு அது இது என்று கவனத்தை சிதறவிடக் கூடாது என்று பவன் கல்யாண் எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறியிருக்கிறார்கள். அவரைப் பொறுத்தவரை அது நியாயம். ஆனால், கேமரா முன்னால் நிற்க கோடிகளை இழக்கவும் எஸ்.ஜே.சூர்யா தயார். 
 
எனக்கு நடிப்புதான் முக்கியம் என்று பவன் கல்யாண் படத்திலிருந்து விலகிவிட்டார். இது தெரிந்த செய்திதான். தெரியாதது, இதற்காக அவர் இழந்த சம்பளம். சுமார் நான்கு கோடி என்கிறார்கள்.
 
கெத்துதான் பாஸ்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்