இறைவி படத்தில் கிடைத்த பெயர், நடிகனாக வேண்டும் என்ற அவரது அந்நாள் கனவை விசிறிவிட்டது முதல்காரணம். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில், நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகிறது. வேறு சில படங்களிலும் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க அழைக்கிறார்கள்.
என்னுடைய படம் முடியும்வரை நடிப்பு அது இது என்று கவனத்தை சிதறவிடக் கூடாது என்று பவன் கல்யாண் எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறியிருக்கிறார்கள். அவரைப் பொறுத்தவரை அது நியாயம். ஆனால், கேமரா முன்னால் நிற்க கோடிகளை இழக்கவும் எஸ்.ஜே.சூர்யா தயார்.