மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை

திங்கள், 13 மார்ச் 2017 (18:03 IST)
நடிகை ரம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 
 
 
'குத்து', 'வாரணம் ஆயிரம்' போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடப் படங்களிலும் நடித்துள்ள ரம்யா, தன்னுடைய  பெயரை திவ்யா ஸ்பந்தனா என்று மாற்றிக் கொண்டார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, எம்.பி.யாகவும் ஆனார்.
 
தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கும் ரம்யா, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரித்துப் பார்த்தால், உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்  என்கிறார்கள். நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்லைங்கோ…

வெப்துனியாவைப் படிக்கவும்