சுந்தர் சி.யின் அரண்மனை படம், ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தழுவல் என்றால், அரண்மனை 2, அரண்மனை படத்தின் தழுவல். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சி ஒன்று வருகிறது.
மரக்கடையில் நடக்கும் அந்தச் சண்டைக் காட்சியை 'த ஈகுவலைசர்' என்ற ஹாலிவுட் படத்திலிருந்து அப்படியே தழுவியுள்ளார். த ஈகுவலைசரில், டென்சில் வாஷிங்டன்னின் கண்ணுக்குள் கேமரா சென்று, அவரது பார்வையில் எதிரிகளின் செயல்கள் காட்சிப்படுத்தப்படும். அதனை அப்படியே அரண்மனை 2 படத்தில் வைத்துள்ளார் சுந்தர் சி.