இந்திப் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த தனுஷ்

வியாழன், 2 ஜூன் 2016 (10:44 IST)
நண்பர்களின் படங்களில் கௌரவ வேடத்தில் நடிக்க பொதுவாக நடிகர்கள் சம்பளம் வாங்குவதில்லை. 


 


தென்னிந்திய சினிமாவில்தான் இப்படி. இந்திப் படங்களின் வியாபாரம் பெரிது என்பதாலா தெரியவில்லை, கௌரவ வேடத்தில் நடித்தாலும் பெரும் சம்பளம் எதிர்பார்ப்பார்கள் நடிகர்கள்.
 
இந்திப்பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய் தனுஷை, ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தியவர். 
 
இருவரும் மீண்டும் இணைந்து படம் செய்ய உள்ளனர். இந்நிலையில், ஆனந்த் எல்.ராய் தனது நிம்மோ என்ற திரைப்படத்தில் தனுஷை கௌரவ வேடத்தில் நடிக்க அழைத்தார். நட்பு காரணமாக தனுஷும் நடித்துத் தந்தார். 
 
ஆனால், அதற்காக சம்பளம் வாங்க அவர் மறுத்துவிட்டார்.
 
இந்தியில் கௌரவ வேடத்தில் நடித்தாலும் சம்பளம் தரப்படும் என்பதால் தனுஷின் செய்கை ஆனந்த் எல்.ராயை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தனுஷின் செயலை வியந்து நண்பர்களிடமும், மீடியாவிடமும் கூறி வருகிறார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்