ரோஜாவில் நாயகனாக அறிமுகமான அரவிந்த்சாமி புகழின் உச்சியில் இருக்கும் போதே, சினிமாவுக்கு டாட்டா காட்டினார்.
அதன் பிறகு சமீபத்தில் தனி ஒருவன் படத்தில் வில்லனாக திரும்பி வந்தார். தற்போது இந்தியில், டியர் டாட், தமிழில் போகன் என்று இரு படங்களில் நடித்து வருகிறார். டியர் டாட் முடிந்து விரைவில் திரைக்கு வருகிறது.
அரவிந்த்சாமியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? வில்லன் அல்லது நாயகன்?
இரண்டும் இல்லை. படம் இயக்குவதுதான் அரவிந்த்சாமியின் அடுத்த இலக்காம். ஏற்கனவே இரண்டு கதைகள் எழுதி வைத்திருக்கிறாராம். அதில் ஒன்றை முதலில் இயக்க உள்ளாராம்.