நண்பர்களுடன் மாஸ்க் அணிந்து வெளியில் சென்ற விஜய் - வைரல் புகைப்படம் இதோ

புதன், 22 ஜூலை 2020 (18:19 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தன்னுடைய நண்பர்களுடன் மாஸ்க் அணிந்துகொண்டு வெளியில் சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

ஆனால், இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை. ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்க இப்படி மாஸ்க் அணிந்து கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துள்ளார். இது இந்த நேரத்தில் பார்ப்பதற்கு கொரோனாவிற்காக மாஸ்க் போட்டுள்ளார் எனவே இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என எளிதில் தவறாக புரிந்துகொள்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்