’’மக்களுக்கு உதவி செய்யுங்கள்’’ விஜய் பட நடிகை’ வேண்டுகோள்’

வெள்ளி, 21 மே 2021 (17:37 IST)
master ott

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென முன்னணி நடிகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகிவரும் நிலையில், கொரொனாவால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரக்கம் மற்றும் மக்களின் கஷ்டத்தை அறிந்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இக்காலத்தில் அனைவரும் கொரொனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்       பவன் கல்யாணுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த வக்கீல் சாப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

விஜய்யுடன் புலி படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்