கஷ்டப்பட்ட பலனை அனுபவிக்கும் பிரபாஸ்

வியாழன், 4 மே 2017 (12:44 IST)
‘பாகுபலி’ படத்துக்காகப் பட்ட கஷ்டத்துக்கு ஈடான பலனை அனுபவிக்கப் போகிறார் பிரபாஸ் என்கிறார்கள் தெலுங்குப்  படவுலகினர்.

 
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘பாகுபலி’ படத்துக்காக, 5 வருடங்கள் வேறெந்தப்  படத்திலும் நடிக்காமல், ‘பாகுபலி’யே கதியெனக் கடந்தார் பிரபாஸ். ஒருசில நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்ட விளம்பரப்  படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. 
 
பிரபாஸின் இந்தக் கஷ்டத்திற்கு, கைமேல் பலன் கிடைத்துள்ளது. அதுவரை நடிகர்களுள் ஒருவராக அறியப்பட்ட பிரபாஸ், தெலுங்கு சினிமா டாப் ஸ்டார்களில் ஒருவராகியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ‘பாகுபலி’ வெளியானதால், இந்தியா முழுமைக்கும் தெரிந்த நடிகராகிவிட்டார். குறிப்பாக, தமிழ் மற்றும் ஹிந்தியில் அவருக்கு நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்