ரசிகர்களின் விருப்பத்திற்காக பிரபாசுடன் இணைய முடிவு செய்த அனுஷ்கா

செவ்வாய், 23 மே 2017 (00:23 IST)
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் பிரபாஸ்-அனுஷ்கா ஜோடியின் கெமிஸ்ட்ரி உலகறிந்தது. திரையில் மின்னிய இந்த ஜோடி வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் வைத்தனர்.




 


இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படமான 'சாஹோ' என்ற படத்தை சுகேஷ் என்பவர் இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க கேத்ரினா கைப் உள்பட பல பாலிவுட் பிரபலங்களிடம் தேதி கேட்கப்பட்டது. பிரபாசுடன் நடிக்க அவர்களுக்கு விருப்பம் தான் என்றாலும் படக்குழுவினர் கேட்ட தேதிகள் எந்த முன்னணி நடிகையிடமும் இல்லை என்பது சோகமாக விஷயம்.

இந்த நிலையில் இயக்குனர் சுகேஷ், அனுஷ்காவை அணுக அவர் ஸ்கிரிப்டை படித்துவிட்டு முடிவு சொல்வதாக கூறியுள்ளார். ஸ்க்ரிப்டில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ளதால் கண்டிப்பாக அனுஷ்கா ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்