கோ.ஆதனூர் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைப்பெற்ற இப்பேரணியில் திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்ததுடன், வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்று அரசு பள்ளியில் சேர்ப்பதன் அவசியத்தையும், அரசு பள்ளிகளின் சிறப்புகளையும் வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு முழுக்கங்கள் எழுப்பி சென்றனர்.